தலைப்பை பார்த்ததுமே பலர் தவிர்ப்பீர்கள் என்று நினைக்கின்றேன். செத்தால் தன் சுடுகாடு தெரியும் என்பது பழமொழி... அது போலத்தான் நமக்கும் நண்பர்கள் வீட்டில் இறப்பு நடந்த போதும் சரி, உறவினர் வீட்டில் இறப்பு நடக்கும் போதும் சரி நாம் இழந்து பகுதியில் இருந்தோம் என்பதால் அதன் வலி நம்முள் சூழ்ந்து இருக்கும். அனால் அந்த இறப்பு எதனை பேருக்கு சோறு போடுகிரதேன்பதை சமூகத்தை விட்டு சற்றே தள்ளி நின்று பாருங்கள் புரியும். இறந்தவுடன் நாம் அழைக்கும் முதல் அழைப்பு அமரர் ஊர்தி , யாருமே சாகாமல் இருக்கும் பொது அந்த வண்டியின் ஓட்டுனர் எதைக்கொண்டு சாப்பிடுவார்? கிராமத்தில் சாவுக்கு கூத்து கட்டுபவர்கள் என்று ஒரு சாரர் உண்டு... இறப்பு இல்லாவிட்டால் அவர்களுக்கு பிழைப்பே கிடையாது... அதே போல் நயனம், மேளம், தாளம், பாடை கட்டுபவர், மலர் அலங்கரிப்பவர், வெட்டியான், இப்படி ஒரு கூட்டமே மற்றவரின் சாவை எதிர் பார்த்து இருக்கையில் சாவு ஒரு நல்ல விஷயமே... வெளிநாடுகளில் இதை விட ஒரு படி மேலே போய் இதை ஒரு தனி வியாபாரமாகவே செய்து வருகின்றனர். உதரனத்திற்க்கு நம் மதுரையை எடுத்து கொள்வோம், இதை இன்னும் 50 களைத்து பார்ப்பீர்களேயானால் மிதம் மிஞ்சிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். அப்போது இறந்தவர்களை அடக்கம் செய்வது வீட்டினுள் இயலாத காரியம் . இதற்கென்று வெளிநாட்டில் உள்ளதைப்போல் இறுதி மரியாதை மையங்கள் திறக்கப்பட்டு இருக்கும். அங்கு குளிர்பதன வசதி முதல் மலர்வளையம் வரை அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும், அகவே நீங்கள் கணினியில் ஒரு சொடுக்கு சொடுக்கினால் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு மலர் வலயம் அனுப்பி வைக்க இயலும். இது சிறிய அளவில் மட்டுமல்லாமல் வரும் காலத்தில் பெரிய வியாபாரமாகவே மாறிவிடும். வாய்ப்பில்லை என்று நீங்கள் கூறுவது என் காதில் கேட்கிறது.
யோசித்து பாருங்கள் 50வருததிர்க்கு முன்பு திருமணங்கள் எங்கு நடை பெற்றன. பெரும்பான்மை வீட்டில் மட்டுமே நடை பெரும், பின்பு இடப்பற்றாக்குறை இருந்ததால் கல்யாண மண்டபம் கட்டும் எண்ணம் வந்தது, அது போல தன இறுதி மரியாதையும், இனிமேல் இதற்கென்று மையங்கள் வரத்தான் போகின்றன, பதிவு முறையில் ப்ரோகிதர்களும், மலர் தூவல்களும், பதிவு செய்யப்பட்ட கண்ணீரும் கிடைக்கத்தான் போகிறது. இதற்கான மேற்பட்ட தகவல்களை காண www.maranam.com
இப்பொழுது நானும் மரணத்தை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆம் இந்த இனைய தளத்திற்கான புதிய தகவல் எழுதும் பணியினை பகுதி நேரப்பணியாக நன் செய்து வருகிறேன்... அனுதினமும் மரணத்தை காண்கின்ற பாக்கியம் பெற்றவன் நான் என்பதில் மன நிம்மதி கொள்கிறேன்,,, வாருங்கள் சிறிதே மரணத்தின் பாதையை காணுங்கள்
ayoo ivalavu vishyam irukkaaa? pale pale besh pesh...
ReplyDelete